Saturday, December 12, 2009

காலத்தின் கோலங்கள்

காலத்தின் கோலங்கள்

உரையாடல் இணையமாம்
கவிதைப் போட்டியாம்
பத்து வரிக்கு குறையில்லாமலுமாம்
அய்யகோ
உலகமே சுருங்கி
செல்போன் ஆகி
உள்ளங்கையுக்குள் வந்ததுபோல்
கவிதைகளும்
அன்பு எனும் தலைப்புக்கு
"தாய்" எனவும்
அழகு என்பதற்கு
"பெண்ணே நீ" எனவும்
நிர்வாணப்பெண் எனும் தலைப்புக்கு
"புன்னகையை மட்டும் அணிந்திருப்பவள்" என்றும்
"கமன்ட்டுகளே" ஓரிரு வரி கவிதைகளாகிவிட்ட
காலத்தின் கோலத்தை
யாரே இவர்க்கு
உணர்த்துவர்?