காலத்தின் கோலங்கள்
உரையாடல் இணையமாம்
கவிதைப் போட்டியாம்
பத்து வரிக்கு குறையில்லாமலுமாம்
அய்யகோ
உலகமே சுருங்கி
செல்போன் ஆகி
உள்ளங்கையுக்குள் வந்ததுபோல்
கவிதைகளும்
அன்பு எனும் தலைப்புக்கு
"தாய்" எனவும்
அழகு என்பதற்கு
"பெண்ணே நீ" எனவும்
நிர்வாணப்பெண் எனும் தலைப்புக்கு
"புன்னகையை மட்டும் அணிந்திருப்பவள்" என்றும்
"கமன்ட்டுகளே" ஓரிரு வரி கவிதைகளாகிவிட்ட
காலத்தின் கோலத்தை
யாரே இவர்க்கு
உணர்த்துவர்?
Saturday, December 12, 2009
Subscribe to:
Comments (Atom)