Saturday, December 12, 2009

காலத்தின் கோலங்கள்

காலத்தின் கோலங்கள்

உரையாடல் இணையமாம்
கவிதைப் போட்டியாம்
பத்து வரிக்கு குறையில்லாமலுமாம்
அய்யகோ
உலகமே சுருங்கி
செல்போன் ஆகி
உள்ளங்கையுக்குள் வந்ததுபோல்
கவிதைகளும்
அன்பு எனும் தலைப்புக்கு
"தாய்" எனவும்
அழகு என்பதற்கு
"பெண்ணே நீ" எனவும்
நிர்வாணப்பெண் எனும் தலைப்புக்கு
"புன்னகையை மட்டும் அணிந்திருப்பவள்" என்றும்
"கமன்ட்டுகளே" ஓரிரு வரி கவிதைகளாகிவிட்ட
காலத்தின் கோலத்தை
யாரே இவர்க்கு
உணர்த்துவர்?

8 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

அட அட அடா,,,,

வாழ்த்துக்கள்....

பூங்குன்றன்.வே said...

பின்றாங்கப்பா. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan said...

இந்த ஒரு வரிக் கவிதைகள் கூட நல்லா இருக்கே வேலுசாமி

வெற்றி பெற வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

ரொம்பவும்ல வித்தியாசமா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்

Vidhoosh said...

எங்க...எங்க.. ஏங்க???

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Velu said...

நன்றி திரு பிரியமுடன்...வசந்த்



நன்றி திரு பூங்குன்றன்.வே


நன்றி திரு thenammailakshmanan


நன்றி திரு S.A. நவாஸுதீன்


நன்றி திரு Vidhoosh

Velu said...

நன்றி திரு தியாவின் பேனா

G.VINOTHENE said...

எதிர்பார்க்காத தலைப்பைக்கொண்டு
எதிர்பார்க்காத கருக்கொண்ட கவிதை.
ரசிக்கக்கூடிய கவிதை.வெற்றி பெற என் வாழ்த்துகள்.